வியாழன், 20 அக்டோபர், 2016

மார்வாடு






மானம் கெட்டவனின்..
மனதோடு ஒன்றிப்போய்...!
மானம் கெட்டேனும்,
வாழும் வாழ்க்கையே.. மார்வாடு...!!

உழைப்பு வேண்டும்...
எத்தனிக்கும் மனசு...!
கவலை இல்லாக்கலவன் - அவன்
உயர்வுக்கு.. மார்வாடு...!!

மனம் பெற்றும்,
வாழாது வாழ்க்கை...
நம்மில் நாமே செய்த மார்வாடு...!!

வின் முட்டும்-வீண் தர்க்கம்...
சிந்தனைக்கு எட்டா...
சிந்தனையின்... மார்வாடு..!

நற்செயல்.. புரிந்தாலே - நாளும்,
நலம் உண்டாம் - தன்
சிறப்புக்கு வேண்டா...
சின்னசாதிப்பயலின்.. மார்வாடு..!

கலையா கனவு... கண்டதும் உறக்கம்,
ஆழ்ந்த.. சிந்தனைக்கு, மார்வாடு..!

பிழையொன்றும் இல்லை - உன்
நட்பின் எல்லை இருந்தும்...
மறந்தேன் - நான்
புரியாமல் இருந்த மார்வாடு..!

அறிவுக்கு எட்டியும்.. அசரவில்லை - என்
மனம் - நீ
தரும் நட்புக்கு - நான்
தரும் பிழையே.. மார்வாடு...!

உள்ளங்கள் இறைஞ்சும் - ஊமை
குரலுக்குள்ளே, உன்னதமாய்...
வார்த்தை உண்டு - அது
புரியா வினா..? என்றால் - நம்
புத்தி புரியும்... புத்தாந்த, மார்வாடு...!

அன்றில் இல்லை, என்றுமே இல்லை...
கத்தை கத்தையாக...
வித்தகனின் விமர்சனம். பேனா மையில்...
மறந்து போவான்.. மறுகணம் - அது
கொள்கைக்கு - அவன்
கோட்பாடு.. மார்வாடு...!

இளந்துயரத்தில்.. துயரம் கண்டு...
தொல்லைகள் பல கண்டு...
சோதனையில் - தோல்
கொடுத்து.. தோலமைக்கு - தான்
ஏங்கி, என்றும் நிலைத்திருப்போம்...!
என்றெண்னும்.. போதினிலும்...
என்றோ, ஒரு நாள்..!
என்னோற்றால், விமர்சனம்..

முன்கால.. வாழ்க்கையின்,
முக்கால் வாழ்க்கை - அன்றே,
அழித்திடுவாள் - அவள்
பேசும், பேச்சு... மார்வாடு...!

கவிதைக்கு இறைஞ்சி கனா கண்ட - என்
தோழா தர தவறிவிட்டேனா - அது,
நம்மில், உமக்காய் மார்வாடு...!

இல்லை,

கேட்டும்... தரவில்லையே.. என்று,
எமை மறந்து போனாயோ...? - அது
எமக்கு செய்யும் மார்வாடு...!

நித்தநிக்கும் - என்
மனம் - நிலா
தேடி சிந்தனை, கிடைக்கவில்லை - அன்று
அமாவாசை.
என்னோற்றான் - என்
எண்ணத்தில்.. செய்வதில்லை மார்வாடு...!

மேலும்,

இன்னும் இருக்கு...

இருந்தும் போதும்,

என்றெண்ணி...

முடிக்கிறேன்.

முனன்காதீர்.

"அதுவும் மார்வாடு".  (சீனி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக